திருச்சபைக் கட்டளைகள்

1. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திரு நாட்களிலும் முழுப்பூசை காண்கிறது.

2. வருடத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது.

3. பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து தேவ நற்கருணை உட்கொள்ளுகிறது.

4. வெள்ளிக்கிழமைகளிலும் மற்று முள்ள சுத்தபோசன நாட்களில் சுத்த போசனமும், ஒருசந்தி நாட்களில் ஒரு சந்தியும் அனுசரிக்கிறது.

5. விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும் விக்கினமுள்ள உறவு முறையாரோடும் கலியாணம் செய்யாதிருக்கிறது.

6. நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.