நவவிலாச சபை சம்மனசுக்களுக்கு பிரார்த்தனை.


சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா எங்களைத் தயைப்பண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரா எங்களைத் தயைப்பண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சிஷ்டதமதிரித்துவமாயிருக்கிற ஏக சர்சுேரா எங்களைத் தயைப்பண்ணி இரட்சியும் சுவாமி

சம்மனசுக்களின் இராக்கினியாயிருக்கிற அர்ச்சிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட பக்திச் சுவாலகர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட ஞானாதிக்கர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட பத்திராசனர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட நாதகிருத்தியர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட சத்துவகர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட பலவத்தர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட பிராதமிகர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட அதிதூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட காவல் தூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



நவவிலாச சம்மனசுக்களுக்கும், சர்வேசுரனுடைய மக்களுக்கும் எப்போதும் பரிபாலகராயிருந்த அர்ச்சிஷ்ட மிக்கயேலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

லூசி பேரையும் அவனைச் சார்ந்த கெட்ட சம்மனசுக்களையும் நரகத்தில் தள்ளின் அர்ச்சிஷ்ட மிக்கயேலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தானியேல் என்பவருக்கு அதிசய காட்சியை விளக்கி கூறிய அர்ச்சிஷ்ட கபிரியேலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஸ்நாபக அருளப்பருடைய பிறப்பையும் அலுவல் களையும் சக்கரிய ஸ் என்பவருக்கு முன்னறிவித்த அர்ச்சிஷ்ட கபிரியேலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தி வ் வி ய சு த னி ன் ம னி தா வ தாரத் தை கன்னி மரியம்மாளுக்கு அறிவித்த அர்ச்சிஷ்ட கபிரியேலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தோபியாஸ் என்பவரை சிந்தாத்திரையாய்க் கூட்டிக் கொண்டுபோய், மீண்டும் கூட்டிக்கொண்டு சேர்த்த அர்ச்சிஷ்ட இரபாயேலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சாராள் என்பவளைப் பசாசின் சோதனையில் நின்று இரட்சித்த அர்ச்சிஷ்ட இரபாயேலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பெரிய தோபியாஸ் என்பவருக்குப் பார்வையை மீண்டும் தந்தருளின அர்ச்சிஷ்ட இரபாயேலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உன்னத சர்வேசுரனுடைய மகிமை சிங்காசனத்தைப் புடைசூழ்ந்திருக்கிற நவவிலாச சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரிசுத்தர் , ப ரி சுத்தர், பரிசுத்தர் என்று என்றென்றைக்கும் சர்வேசுரனை ஸ்துதிக்கிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரலோகத்திலே இருக்கிற சர்வேசுரனுடைய சன்னிதானத்தை இடை விடாமல் தரி சித்துக் கொண்டிருக்கிற அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சூரியனை ஆடையாக அணிந்து நின்ற நித்திய பெண்மணியைச் சூழ்ந்து நிற்கின்ற நவவிலாச சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நவவிலாச சம்மனசுக்களிலிருந்து தேவமாதாவின் பணிவிடைக்காக சர்வேசுரனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மனுமக்களை விசாரித்துக் காப்பதற்கும் நல்வழியில் நடத்துவதற்கும் சர்வேசுரனால் கட்டளை பெற்றிருக்கிற அர்ச்சிஷ்ட காவல் சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சோதோம் நகர் மக்களின் அக்கிரமத்தைக் குருட்டாட்டத்தினால் தண்டித்த அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அந்த அக்கிரம அவிசுவாசிகளில் நின்று லோத் என்பவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மீட்டுக் காப்பாற்றின் அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

யாக்கோபு என்பவரை சகல பொல்லாப்புகளிலிருந்து தப்புவித்தருளின அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவர் காட்சியில் கண்ட ஏணியிலே ஏறியும் இறங்கியும் இருந்த அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மோயீசனுக்குத் தேவை கற்பனைகளைக் கொடுத்தருளிய அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலக இரட்சகர் பிறந்த சமயத்தில் சர்வேசுரனுக்கு ஸ்துதியும் மனிதர்களுக்குச் சமாதானமும் உண்டாகக் கடவது என்று வாழ்த்திப் பாடிய அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதரைச் சோதித்த பசாசு நீங்கினவுடனே வனாந்தரத்தில் அவருக்குப் பணிவிடை புரிந்த அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பூங்காவனத்தில் மரண அவஸ்தைப்பட்ட சேசுநாதருக்கு ஆறுதல் சொல்லிய அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவருடைய கல்லறையில் தூய வெண்ணாடை அணிந்தவர்களாய்க் காணப்பட்ட அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவர் மோட்சத்திற்கு ஆரோகணமானபோது அவருடைய சீடர்களுக்கு தரிசனையான அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதர் ஜீவியரையும் மரித்தோரையும் நடுத்தீர்க்க மகிமையோடு எழுந்தருளி வரும்போது, தேவமாதாவுடன் அவரைப் புடைசூழ்ந்து வரவிருக்கும் அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அச்சமயத்தில் ஆண்டவருக்கும் மாதாவுக்கும் முன்பாக சிலுவைக் கொடியை ஏந்திவரப் போகிற அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போது, நல்லோர்களையும் தீயோர்களையும் பிரிக்கப்போகிற அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எங்கள் மன்றாட்டுக்களை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிற அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மனஸ்தாபப்படுகிற பாவியின் மேல் ஆனந்த சந்தோஷம் கொள்கிற அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மரணசமயத்தில் எங்களுக்கு உதவியாயிருக்கிற அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆபிரகாமின் மடியில் இலாசரைக் கூட்டிக்கொண்டு போய் வைத்த அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல பாவங்களுக்கும் பரிகாரம் செய்த பரிசுத்த ஆன்மாக்களை மோட்சத்துக்குக் கூட்டிக்கொண்டு போகிற அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ வல்லப வரத்தால் பற்பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்கிற அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தங்கள் இரட்சணிய சுதந்திரத்தைப் பற்றிக்கொள்கிறவர்களுக்கு உதவி செய்பவர்களாய் அனுப்பப்படுகிற பராமரிப்புள்ள அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிற தேவ ஊழியர்களாகிய அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இராச்சியங்களுக்கும் நாடுகளுக்கும் பரிபாலகர்களாக ஏற்படுத்தப்பட்டிருக்கிற அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அநேகமுறை சத்துருக்களுடைய சேனைகளைத் தோற்கடித்த அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சிறைச்சாலை க ளி லும் மற்ற அநேக ஆபத்துக்களிலுமிருந்து சர்வேசுரனுடைய அடியார்களை மீட்டுக்கொண்ட அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேதசாட்சிகளின் வேதனைகளில் அடிக்கடி ஆறுதலாயிருந்த அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருச்சபையை ஆளுகிற குருசிரேஷ்டர்களை மிகுந்த பட்சத்தோடு பராமரிக்கிற அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நவவிலாச சபைகளாய் பகுக்கப்பட்டிருக்கிற சகல அர்ச்சிஷ்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல பொல்லாப்புகளிலேயும் நின்று உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பசாசினுடைய தந்திரங்களிலே நின்று, உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால் எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

சகல பாவங்களிலேயும் நின்று, உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பிரிவினையிலும் பதிதத் தனத்திலேயும் நின்று உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

கொள்ளை நோய் பஞ்சம் படையிலே நின்று உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

ஆயத்தமில்லாமல் சடுதியிலே வருகிற துர்மரணத்திலே நின்று உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

நித்திய மரணத்திலே நின்று உம்முடைய பரிசுத்த --- சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பாவிகளாயிருக்கிற நாங்கள் அர்ச்சிஷ்ட சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் பாவங்களை போக்கியருள வேண்டுமென்று அர்ச்சிஷ்ட சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்களுக்குத் தயை செய் து இரட்சித்தருள வேண்டுமென்று அர்ச்சிஷ்ட சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பரிசுத்த பாப்பரசர் மற்றும் அதி சிரேஷ்ட அதிகாரிகளையும், சத்திய திருச்சபையில் ஏற்பட்ட சகல குரு க் க ள் து ற வி ய ல ர யு ம் தற் காத்த ருள வேண்டுமென்று அர்ச்சிஷ்ட சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

சத்திய வேத இராஜாக்களுக்கும் பிரபுக்களுக்கும் ஜனங்களுக்கும் சமாதானத்தையும் சரியான ஒருமைப்பாட்டையும் தந்தருள வேண்டுமென்று அர்ச்சிஷ்ட சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பூமியிலே நல்ல பயிர் விளைவின் பலன் தந்து காப்பாற்ற வேண்டுமென்று அர்ச்சிஷ்ட சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

மரணமடைந்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிட்டருள வேண்டுமென்று அர்ச்சிஷ்ட சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் மரண சமயத்தில் உம்முடைய சம்மனசுக்களை எங்களிடத்தில் அனுப்பியருள வேண்டுமென்று அர்ச்சிஷ்ட சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

மரணத்திற்குப்பின் எங்கள் ஆன்மாக்களை பரிசுத்த சம்மனசுக்கள் மூலமாக ஏற்று, நித்திய பேரின்ப பாக்கியத்தைத் தந்தருள வேண்டுமென்று அர்ச்சிஷ்ட சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

சர்வேசுரனுடைய சுதனே தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய சேசுவே - எங்கள் பாவங்களைப்போக்கியருளும் சுவாமி.

உல கத்தின் பாவங்களைப் போக் கு கிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே - எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்கு கிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்கள் ஆகத்தக்கதாக, முத்தர்களான பரிசுத்த சம்மனசுக்களுடைய சகலவித சபைகளே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

ஜெபிப்போமாக.

தயாபரரான சர்வேசுரா சொல்லற்கரிய தேவ பராமரிப்பினால் எங்களைக் காத்து நடத்த உம்முைடய பரிசுத்த சம்மனசுக்களை அனுப்பியருளுகிறீரே, உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. தேவரீரை மன்றாடுகிற அடியோர்கள் இவ்வுலகத்தில் சம்மனசுக்களின் ஆதரவினால் காப்பாற்றப்பட்டு உமக்கும் அவர்களுக்கும் பிரியப்பட பிரமாணிக்க பக்தியாய் நடக்கவும் மோட்சத்தில் அவர்களோடு உம்மை என்றென்றைக்கும் ஸ்துதித்து வாழ்த்தவும் கிருபை செய்தருளும் சுவாமி.!

ஆமென்.