நன்மை உட்கொண்டபின் ஜெபம்.

(அர்ச். இஞ்ஞாசியார் செய்த ஜெபம்)

கிறிஸ்துவினுடைய ஆத்துமமானதே, என்னை அர்ச்சிஷ்டவனாக செய்தருளும். கிறிஸ்துவினுடைய திருசரீரமே என்னை இரட்சித்துக்கொள்ளும். கிறிஸ்துவினுடைய திரு இரத்தமே எனக்கு திருப்தி உண்டாக பண்ணியருளும். கிறிஸ்துவினுடைய விலாவினின்று ஓடி விழுந்த திருத் தண்ணீரே, என்னைக் கழுவியருளும். கிறிஸ்துவினுடைய திருப்பாடுகளே, எனக்கு தேற்றரவுண்டாக பண்ணியருளும். ஓ நல்ல சேசுவே, நான் கேட்கிறதை தந்தருளும்.

உம்முடைய திருக்காயங்களுக்குள்ளே என்னை வைத்து மறைத்துக் கொள்ளும். என்னை உம்மை விட்டு பிரிய விடாதேயும். துஷ்ட சத்துருக்களிடமிருந்து என்னை இரட்சித்துக்கொள்ளும்.

என் மரண தருவாயில் நீர் என்னை அழைத்து உம்முடைய சந்நிதியில் உட்பட்ட சகல அர்ச்சியஷ்டவர்களோடு கூட நான் உம்மை ஊழியுள்ள காலம் தோத்திரம் பண்ணும்படி அடியேன் உம்முடைய சந்நிதியில் வரக் கற்பித்தருளும்.

ஆமென்.