அர்ச்சியசிஷ்ட தஸ்நேவிஸ் மாதாவுக்கு செபம்.

பிதாவாகிய சர்வேசுரனுடைய குமாரத்தியே! சுதனாகிய சர்வேசுரனுடைய தாயாரே! பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள நேசமே! மனிதருக்கு அடைக்கலமே! சர்வலோகத்துக்கும் ஆண்டவளே! உமக்குப் பிள்ளைகளாயிருக்கிற நாங்களெல்லாரும் உமது திருப்பாதத்திலே சாஷ்டாங்கமாக விழுந்து எப்படியாகிலும் எங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று உம்மைப் பிரார்த்திக்கிறோம். தேவமாதாவே! நீர் ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்தீரே, எங்கள் ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிகிற நேரம் நாங்களும் பாவமில்லாதிருக்கச் செய்தருளும். மாதாவே! உம்மை நம்பினோம் எங்களைக் கைவிடாதேயும். விசேஷமாய், நாங்கள் சாகிற தருவாயில் மோட்சம் போகாதபடி தடுக்கும் பசாசினுடைய தந்திரங்களை எல்லாம் தள்ளி, நாங்கள் உம்முடைய திருக்குமாரன் அண்டைக்கு வரத் துணையாயிரும். இதினிமித்தமாய் உம்முடைய பரிபூரண ஆசீர்வாதத்தைக் கேட்டு நிற்கிறோம். அதை அடியோருக்கு இரக்கத்தோடே கட்டளை பண்ணியருளும் தாயாரே! மாதாவே! ஆண்டவளே!

ஆமென்.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள்பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.

அருள்நிறைந்த... (3 முறை)