உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகாமல் மோட்சம் செல்ல உதவக்கூடிய பரிகார ஒப்புக்கொடுத்தல் ஜெபம்.

நித்திய பிதாவே! இன்று தினத்திலும் என் சீவிய காலம் முழுவதும் நான் கட்டிக்கொண்ட சகல பாவங்களுக்கும் பரிகாரமாக, சேசு மரிய இருதயங்களை அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும், சகல பேறுபலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

நித்திய பிதாவே! இன்று தினத்திலும் என் சீவிய காலம் முழுவதும் நான் குற்றங்குறைகளோடு செய்த நன்மைகளைச் சுத்திகரிப்பதற்காக சேசு மரிய இருதயங்களை அவர்களின் நேசத்தோடும் சகல பாடுகளோடும் சகல பேறுபலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

நித்திய பிதாவே! இன்று தினத்திலும், என் சீவிய காலம் முழுவதும் நான் செய்யத்தவறிய நன்மைகளுக்கு ஈடாக, சேசு மரிய இருதயங்களை அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும் சகல பேறுபலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

ஆமென்.

குறிப்பு: இந்தச் செபத்தைப் பக்தியுடன் சொல்லிவந்த ஒரு சகோதரி, அதனிமித்தம் தான் உத்தரிக்கிற ஸ்தலம் போகாமல் மோட்சம் சென்றதாக தன் உடன் சகோதரிக்கு காட்சியில் தோன்றி சொல்லியுள்ளதாக ஒரு வரலாறு உள்ளது.