வியாகுல அருள் நிறை மந்திரம்.

அர்ச்சியசிஷ்டதனமுள்ள பாப்பரசராகிய ஒன்பதாம் பத்திநாதர் நம் இரட்சகருடையவும், அவருடைய வியாகுல மாதாவுடையவும் மிகக் கசப்பான துன்பங்களின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். நமது ஆண்டவரின் பாடுகளையும், அவரது திருமாதாவின் வியாகுலங்களையும் அடிக்கடி தியானிப்பது, பாவிகளை மனந்திருப்பவும், மனஸ்தாபம், தவம், பரிகாரம் ஆகியவற்றிற்கான ஒரு நிலையான தூண்டுதலை அவர்களுக்குத் தரவும் மிகப் பயனுள்ள ஒரு வழியாக அவருக்குத் தோன்றியது. எனவே 1847-ல் அவர் வியாகுல மாதாவுக்குத் தோத்திரமாக இயற்றப்பட்ட ஒரு புதிய அருள்நிறை மந்திரத்தை அங்கீகரித்தார்.  அந்த ஜெபம் பின்வருமாறு:

வியாகுலங்கள் நிறைந்த மரியாயே வாழ்க, சிலுவையில் அறையப்பட்டவர் உம்முடனே. பெண்களுக்குள் மிகுந்த இரக்கத்திற்குத் தகுதியுள்ளவர் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் மிகுந்த இரக்கத்திற்குத் தகுதியானவரே. அர்ச். மரியாயே, சிலுவையில் அறையப்பட்டவரின் மாதாவே, உம்முடைய திருக்குமாரனை சிலுவையில் அறைந்த நாங்கள், மனஸ்தாபக் கண்ணீரை இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் பெற்றுக் கொள்ளும்படியாக, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆமென்.