சேசுவிடமும் மாதாவிடமும் ஜெபம்.

ஆண்டவராயிருக்கிற சேசுக்கிறிஸ்துவே, உமது திருப்பாடுகளின் வேளையில் தன் ஆத்துமத்தில் வியாகுல வாளால் ஊடுருவப்பட்ட உமது திருத்தாயாரும், நித்திய கன்னிகையுமான மாமரி, இரக்கத்தின் சிங்காசனத்திற்கு முன்பாக இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் எங்களுக்காகப் பரிந்து பேசுவார்களாக.
ஆமென்.

பரிசுத்த இராக்கினியே, அடியேன் என் இருதயத்தில் உம்முடைய வியாகுலங்களையும், நேசத்தையும் உணரும்படியாக, உமது திருக்காயங்களை என் இருதயத்தில் பதியச் செய்தருளும். உமக்காக எனக்கு வரும் ஒவ்வொரு வியாகுலத்தையும் நான் பொறுமையோடு தாங்கும்படியாக எனக்கு வியாகுலங்களையும், உமக்காக மற்றெல்லா உலக நேசங்களையும் நான் வெறுத்துத் தள்ளும்படியாக, உம்மீது நேசத்தையும் எனக்குத் தந்தருளும்.

ஆமென்.