செபமாலை முடிவில் சொல்ல வேண்டிய செபம்.

அதிதூதரான அர்ச்சியசிஷ்ட மிக்கேலே, தேவதூதர்களான அர்ச்சியசிஷ்ட கபிரியேலே, இரஃபேலே, அப்போஸ்தலர்களான அர்ச்சியசிஷ்ட இராயப்பரே, சின்னப்பரே, அருளப்பரே நாங்கள் எத்தனை பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த 53 மணி செபத்தையும் உங்கள் தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி அர்ச்சியசிஷ்ட தேவமாதவின் திருப்பாதத்திலே பாதகாணிக்கையாக வைக்க உங்களைப் பிரார்த்தித்துக்கொள்கிறோம்.

பாப்பரசருடைய சுகிர்த கருத்துக்களுக்காகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவிகள் மனம் திரும்புவதற்காகவும், சேசு, மரிய இருதயங்களுக்கு நிந்தைப் பரிகாரமாகவும், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காகவும் இந்த ஜெபமாலையை ஒப்புக்கொடுத்து வேண்டிக்கொள்வோம்.

1 பரலோகத்தில் இருக்கின்ற...
1 அருள் நிறைந்த மரியே...
1 பிதாவுக்கும்...
1 ஓ என் இயேசுவே...

ஆமென்.