இரக்கத்திற்கான செபம்.

"எவனிடம் பிரசன்னமாய் இருப்போமோ, அவன் மட்டில் இரங்குவோம். எவன் மீது இரக்கமாய் இருக்கத் திருவுளம் கொள்வாயோ, அவன் மேல் இரக்கம் வைப்போம் (யாத் 33:19) என்ற ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும், பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என் மீது இரக்கமாயிரும். அல்லேலூயா, அல்லேலூயா.

நான் குடியிருக்கும் வீட்டின் மீது இரக்கமாயிரும். என் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும். என் பெற்றோர் மீது இரக்கமாயிரும். என் சகோதர, சகோதரிகள் மீது இரக்கமாயிரும். என் பிள்ளைகள் மீது இரக்கமாயிரும். என் கணவன், மனைவி மீது இரக்கமாயிரும். அல்லேலூயா.

என் உறவினர்கள், நண்பர்கள் மீது இரக்கமாயிரும். என் அருகில் வசிக்கும் குடும்பங்களின் மீது இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என் மீது இரக்கமாயிரும். அல்லேலூயா.

ஆண்டவரே, உம் இரக்கத்திற்கு கெடு வைக்காமல் என் மனம் போல எனக்கு நாளைக் குறிக்காமல், ஆண்டவரே நீர் பொறுமை உள்ளவராய் இருப்பதனால் நான் மனம் வருந்தி கண்ணீர் சிந்தி உம் இரக்கத்திற்காக உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரே, என் முன்னோரின் பாவங்களின் மீது இரக்கமாயிரும். என் முன்னோரால் ஏற்பட்ட கட்டுக்களின் மீது இரக்கமாயிரும். என் முன்னோரின் வழியாக வந்த சாபங்களின் மீது இரக்கமாயிரும். தீச்செயல்களின் மீது இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என்மீது இரக்கமாயிரும். அல்லேலூயா அல்லேலூயா.

"விரும்புகிறவனாலுமன்று; உழைக்கிறவனாலுமன்று. இரக்கம் வைக்கும் கடவுளாலேயே எதுவும் ஆகும் (உரோ 9:14) என்ற இயேசுவே இரக்கமாயிரும். என் தேவைகளின் மீது இரக்கமாயிரும். என் விருப்பங்களின் மீது இரக்கமாயிரும். நான் செய்யும் வேலையின் மீது இரக்கமாயிரும். என்னோடு வேலை செய்வோர் மீது இரக்கமாயிரும். வேலை செய்யும் நிறுவனங்கள் மீது இரக்கமாயிரும். அதன் உடைமைகள் மீது இரக்கமாயிரும். வியாபாரங்கள் மீது இரக்கமாயிரும். வருமானங்கள் மீது இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். தாவீதரசரின் குலத்திலுதித்த இறைமகனே இரக்கமாயிரும். பாவி என் மீது இரக்கமாயிரும். அல்லேலூயா, அல்லேலூயா.

எனக்குண்டான அனைத்துச் சொத்துக்களின் மீது இரக்கமாயிரும். அதில் கிடைக்கும் விளைச்சல்களின் மீது இரக்கமாயிரும். அதில் செய்யும் விவசாயங்களின் மீது இரக்கமாயிரும். எனக்கு நீர் தந்துள்ள அனைத்து உயிரினங்கள், விலங்குகள், பறவைகள் மீது இரக்கமாயிரும். என் வீட்டிலுள்ள அனைத்து உடைமைகள் மீதும் இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என் மீது இரக்கமாயிரும். அல்லேலூயா, அல்லேலூயா.

எங்கள் பங்குத் தந்தையின் மீது இரக்கமாயிரும். எங்கள் பங்கில் உள்ள கன்னியர்கள், பங்கு மக்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். அனைத்து குருக்கள், துறவிகள் மீதும் இரக்கமாயிரும். அல்லேலூயா.
எங்கள் ஆயர்கள், கர்தினால்கள், திருத்தந்தை மீதும் இரக்கமாயிரும். அனைத்து பொது நிலை ஊழியர்கள், அனைத்து தியான மடங்கள், எல்லா தியான குருக்களின் மீதும் இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என் மீதும் இரக்கமாயிரும். அல்லேலூயா, அல்லேலூயா.

எல்லா குரு மடங்கள், உதவி நிறுவனங்கள், பள்ளிக் கூடங்களின் மீதும், அதன் ஆசிரிய, ஆசிரியைகள் மீதும் இரக்கமாயிரும். எல்லா கல்லூரிகள், பொது சேவை மையங்கள், மருத்துவமனைகள், எல்லா அரசு அலுவலகங்கள் மீதும் இரக்கமாயிரும். இந்திய நாட்டின் மீது இரக்கமாயிரும். எங்களில் பெருகி வரும் தீமைகள், வன்முறையாளர்கள், சிற்றின்பப் பிரியர்கள், தீவிரவாதிகள், பிளவு, பிரிவினை உருவாக்குவோர், போதைப் பொருட்களுக்கு அடிமையானோர், திருடர்கள், கலகக்காரர்கள், கொலை, கொள்ளைக்காரர்கள் மீதும் இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என் மீதும் இரக்கமாயிரும். அல்லேலூயா, அல்லேலூயா .

நெறி கெட்டோர், புறணி பேசுவோர் மீது இரக்கமாயிரும். திருமணமாகாதவர் மீது இரக்கமாயிரும். பரிசுத்த குடும்பங்கள், குழந்தை இல்லாதோர் மீது இரக்கமாயிரும். கைம்பெண்கள், கைவிடப்பட்டோர் மீது இரக்கமாயிரும். வேலையில்லாதோர், அனாதைகள், ஊனமுற்றோர், பார்வையற்றோர் மீது இரக்கமாயிரும். வாலிப ஆண்கள், பெண்கள் மீது இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என் மீதும் இரக்கமாயிரும். அல்லேலூயா, அல்லேலூயா.

மந்திரவாதிகள், பேய் பிடித்தோர், அவிசுவாசிகள் மீது இரக்கமாயிரும். நாட்டின் தலைவர்கள், ஆளுநர்கள், காவல் துறையினர், அதன் அதிகாரிகள் மீது இரக்கமாயிரும். நாட்டின் அடிப்படை தேவைகள் மீது இரக்கமாயிரும். தற்கொலை எண்ணமுடையோர், உடல், உள்ள ஊனமுற்றோர், நோயாளிகள் மீது இரக்கமாயிரும். நீதிமான்கள், நீதி வழங்குவோர் மீது இரக்கமாயிரும். வேற்று நாட்டில் வேலை செய்யும் இந்நாட்டினர் மீது இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என் மீதும் இரக்கமாயிரும். அல்லேலூயா, அல்லேலூயா.

கருக்கலைப்பு செய்த பெற்றோர், கருக்கலைப்பு செய்த குடும்பத்தினர், கருக்கலைப்பு செய்ய தூண்டியவர்கள், கருக்கலைப்பு செய்ய உதவியவர்கள், கருக்கலைப்பு செய்த மருத்துவர்கள் மீது இரக்கமாயிரும். கருக்கலைக்கும் நேரத்தில் பதைபதைத்து, துடித்து அடங்கிய குழந்தைகள் மீது இரக்கமாயிரும். அல்லேலூயா.

கடவுளே உம் நீதிமுறைகளை முன்னிட்டன்று; உமது இரக்கத்தை முன்னிட்டே புதுப்பித்து எங்களை மீட்டவரே (தீத்து 3:45, விபத்தில் சிக்குண்டோர், விபத்து குறித்தும், இரவு நேரங்களிலும் அச்சம் கொள்வோர், பயணம் செய்வோர் மீது இரக்கமாயிரும். உலகில் அணு ஆயுதங்கள் தயாரிப்போர் மீது இரக்கமாயிரும். ஐரோப்பிய, அமெரிக்க, கம்யூனிச நாடுகள், உலக நாடுகள் அனைத்தின் மீதும் இரக்கமாயிரும். வறுமையிலும், அடிமைத்தளைகளிலும் வாழும் மக்கள் மீதும் இரக்கமாயிரும். மரம், செடி, கொடிகள், தானியங்கள், பயிர்கள் மீதும் இரக்கமாயிரும். ஆண்டவரே இரக்கமாயிரும். இயேசுவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். பாவியாகிய என் மீதும் இரக்கமாயிரும். அல்லேலூயா, அல்லேலூயா.

ஆமென். 

உன் தாய் வயிற்றில் உன்னை உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன் (எரேமி 15).

எதிர்க்க முடியாத குழந்தைகளை கொலை செய்த பெற்றோர்களையும் அழிக்க திருவுளம் கொண்டீர் (ஞானாகமம் 126).

பிள்ளைகள் ஆண்டவர் அருளும் செல்வம். மக்கள் பேறு அவர் அளிக்கும் நன்கொடை (சங் 126:3).

உன்னை பாதுகாப்பதற்கு தூதரை அனுப்புவோம். அவரை வணங்கவும், அவருடைய வாக்குறுதிக்கு செவி கொடுக்கவும், அவருக்கு பயந்து நடக்கவும் கடவாய் (யாத்திராகமம் 23: 20, 23)

முடிவில்: 
பரிசுத்த பரலோக நாதரே, துன்புறும் எங்களை ஆசீர்வதியும்.