காணார் மலரே கற்பகமே கருணை வான்முகிலே

காணார் மலரே கற்பகமே கருணை வான்முகிலே
தினம் கோடி உன் புகழ்பாட
என் மனம் வேண்டி அழைக்குமே
வினை தானும் அகலுமே - ஆவே

1. ஆயிரம் கோடி ஆதவன் ஒளியைத்
தாங்கிய முகமன்றோ
நிறை ஆலயம் மேவியே ஆசனம்
கொண்டவள் அழகுத் தாயன்றோ
பூத்திடும் புன்னகை பூவிதழ் ஓரங்கள்
சொல்லுவ தென்னென்னவோ
உயர் பாசம் உதிரும் உன் பார்வையுமே
எம்மை பாதங்கள் சேர்த்திடவோ - உந்தன்

2. மங்கை அருள் அதி சுந்தரமே ஜெபமாலை மந்திரமே
திருமந்திர மாநகர் கோவில்
எழுந்த நல் மாணிக்க மகுடமே
அன்புக்கரம் கொண்டு ஆகிய
நாள் முதல் ஆதரவானவளே
அருள் இன்முகம் காட்டி தாயெனக் காத்திடும்
தஸ்நேவிஸ் மாமரியே - திவ்ய