அர்ச். சூசையப்பர் நவநாள் - 7 ம் ஜெபம்

3-வது: தேவ விசுவாசம் அடைய ஜெபம்

சர்வ வல்லமை பொருந்திய சர்வேசுரன் சிறு குழந்தையானபோது அவரை சாட்சாத் கடவுளென்று விசுவசித்து நடுநடுங்கி தேவ ஆராதனை செலுத்திக்கொண்டு வந்த அர்ச். சூசை யப்பரே! நான் உருக்கமுள்ள சாதாரண விசுவாச மடைய எனக்காக வேண்டிக்கொள்ளும். என் இருதயம் கெட்டுப்போன சுபாவத்தின்படியே அவிசுவாசத்தாலும், அவநம்பிக்கையாலும், சந்தேகங்களாலும் அலைக்கழிக்கப்படுவதால் இவ்வித மோசங்கள் நீங்க தேவ வசனம் சூரிய னைப் போல் என் இருதயத்தில் உதிக்கத்தக்க தாகச் சர்வேசுரனிடம் எனக்காக மன்றாடும். மனிதர்கள் பேரில், அநித்திய வஸ்துக்கள் பேரில் விசுவாசம் வைத்து நான் மோசம்போகாமல் செய் தருளும். என்னை உண்டுபண்ணின தேவனையும், அவரது பேரின்பமான மோட்சத்தையும், அவர் பாவிகளுக்குக் கட்டளையிட்ட பயங்கரமான நரகத்தையும், அவர் திருக்குமாரன் எனக்கு உண்டு பண்ணின கிருபையையும், பாவப் பொறுத்தலை யும் நான் உறுதியாக விசுவசிக்கிறேன். என் சரீரத் திலும், பலவீனத்தாலும், வெளித் தந்திரங்களாலும், பாவத்திற்கு ஆக்கினையாக வந்த காரணத்தாலும் நான் மூடப்பட்டிருப்பதால், நான் கண்ணால் பார்க்கக் கூடாததுமாய், என் இருதயம் உணரக் கூடாததுமான தேவ காரியங்களை உயிரூட்டி உஷ்ணம் பொருந்திய விசுவாசத்தோடு நான் விசுவசிக்கச் செய்தருளும். உலக இரட்சகர் இரட்சணியத்தின் வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருப் பதாலும், அவர் நெரிந்த நாணலை முறிக்கா மலும், மங்கிய தீயை அணைக்காமலும் இருப் பதாலும், உலக இருளின் பாதாளத்தில் அகப் பட்டுக்கொண்டு தத்தளிக்கிற என்னை அவர் புறக்கணிக்க மாட்டாரே, ஆகையால் தப்பறை யான உபதேசங்களாலும், மனிதரின் கோட்பாடு களாலும் நான் மோசம் போகாமல் எல்லா விஷயத்திலும் கிறீஸ்துநாதரைக் கண்டு பாவித்து, அவரிடம் நீதியையும் பாக்கியத்தையும் பெற்றுக் கொள்ளச் செய்தருளும். நான் விசுவாசத்தால் ஆபேலைப் போல தேவனுக்கு பலியிடவும், ஏனோக்கைப்போல வானமண்டலத்தில் எடுத்துக் கொள்ளப்படவும், நோவேயைப் போல மெய் யான திருச்சபையின் அவயவமாயிருக்கவும், ஆபிர காமைப்போல் எப்போதும் பரமண்டலத்தை நாடி நிற்கவும் செய்தருளும். விசுவாசத்தால் யாக்கோபு சம்மனசின் ஆசீர்வாதத்தைக் கொண்டதையும், விசுவாசத்தால் மனுப்புத்திரரில் அநேகர் சுபாவத் துக்கு மேற்பட்ட அநேக புதுமைகளைச் செய்த தையும் நான் அறிந்திருக்கிறேன். ஆகையால் உலகத்தாரோடு நான் மகிழ்ச்சி அடையாமல், என் இரட்சகரோடு துன்பத்தின் பாதையில் நான் நடக்கத் திடனுள்ள விசுவாசத்தை எனக்குத் தந்தருளும். பூர்வீக மகாத்துமாக்களைப் போல நான் உறுதியான விசுவாசம் கொண்டு, வானத்தினின்று இறங்கிய தேவ அப்பமாகிய திவ்ய நற்கருணையைப் புசித்துக்கொண்டு, தானியே லைப் போல நரக சிங்கமாகிய பசாசின் வாயை மூடச் செய்து, என்றென்றைக்கும் கர்த்தராகிய சேசுநாதரை நான் காணும்படி எனக்காக வேண்டிக் கொள்ள உம்மை மன்றாடுகிறேன். 

ஆமென்.