அர்ச். சூசையப்பர் நவநாள் - 6 ம் ஜெபம்

2-வது: தேவ பயம் அடைய ஜெபம்

சர்வேசுரனாலே மிகவும் உயர்த்தப்பட்ட அர்ச். சூசையப்பரே! ஞானத்திற்கு ஆரம்பமாகிய தெய்வபயத்தை எனக்கு வாங்கித் தந்தருளும். வானமும் பூமியும் அவைகளில் அடங்கிய காரி யங்களும் தெய்வ மகத்துவத்தையும் வல்லமை யையும் காட்டுவதால், எனக்கு எவ்வளவோ பயங் கரம் உண்டாயிருக்க வேண்டியது. என் நினைவு களும் வார்த்தைகளும், கிரியைகளும் தெய்வ பயத்தால் நடத்தப்படாமல் கெட்டுப் போன என் சுபாவத்தால் இழுக்கப்படுவதைக் கண்டு மிகுந்த விசனப்படுகிறேன். தேவ கற்பனைகளுக்கும் வேத வசனங்களுக்கும் என் மனது பய பட்சத்தோடு அமையாமல் உலக இச்சைகளுக்கும் கீழ்ப்படிவ தால், என் பிரலாபம் மிகுந்து போகிறது. தேவ கட்டளையைப் புறக்கணிப்பவனை தேவன் புறக் கணிப்பார் என்பதை நினைத்து நடுங்குகிறேன். தேவரீர் சிறு வயது முதல் தெய்வ சகாயத்தைக் கொண்டிருந்தீர். என் அசட்டையாலும், மந்த குணத்தாலும் தேவ கோபத்திற்கு உள்ளாகாதபடி அருமையான தேவ பயத்தை நான் அடையச் செய்தருளும். நான் சாவுக்கும், நோவுக்கும், சஞ்சலங்களுக்கும் அஞ்சாமல் பாவங்களையும், பசாசின் கிரியைகளையும் விட்டு, நான் என்னையே பகைக்கச் செய்தருளும். நான் சத்துருவுக்குப் பயப்படுவதுபோல, என்னைப் படைத்த ஆண்டவ ருக்குப் பயப்படாமல், ஒரு பிள்ளை தன் பிதா வுக்குப் பயப்படுகிற சிநேகம் நிறைந்த பயத்தை நான் அடையச் செய்தருளும். உபத்திரவங்களா லும், என் சுபாவ பலவீனங்களாலும், சோதனை களாலும் நான் தளராமல் நேசத்துக்குரிய தெய்வ பயத்தால் என் ஆத்துமம் தைரியம் கொண்டு நிலைநிற்க எனக்காக ஆண்டவரை மன்றாடும். நான் எல்லாக் காரியங்களிலும் சர்வேசுரனின் வல்லமையையும், ஞானத்தையும், கிரியையையும் யோசித்து நேச பயம் கொண்டு, இவ்வுலக துன்பங் களுக்கு நான் பயப்படாதிருக்கக் கிருபை செய் தருளும். செல்வங்களுக்கும், உலக ஆடம்பரங் களுக்கும் என் மனது இசைந்து அஞ்ஞானமான உலகக் கற்பனைகளுக்குப் பயப்படாமல், உள்ளத்திலும் வெளியிலும் கர்த்தருக்கு பயப்பட்டு அவருக்கு பயப்படுகிறவர்களுக்கு அவர் வாக்குத் தத்தம் செய்திருக்கிற இரட்சிப்பையும் இரக்கத் தையும், ஆசீர்வாதத்தையும், ஞானத்தையும், சகாயத்தையும், கிருபாகடாட்சத்தையும், மெய்யான பாக்கியத்தையும் அடையும்படிக்கு எனக்காக வேண்டிக்கொள்ளும். 

ஆமென்.