அர்ச். சூசையப்பர் நவநாள் - 5 ம் ஜெபம்

அர்ச். சூசையப்பரின் அடைக்கல ஜெபம்

1-வது தேவனை அறிய ஜெபம்

பாவ இருள் அகல பரிசுத்தத்தில் உயர்ந்து மனிதர் இயல்பு கொண்ட மட்டும் சம்பூரண மாய்க் கடவுளை அறிந்து ஆனந்த சந்தோ­த்தில் மூழ்கியிருந்த அர்ச். சூசையப்பரே! ஜென்மப் பாவத்தின் இருள் அகல ஆனந்தப் பிரகாசமுள்ள தேவன் வந்து என் அகத்தில் பிரவேசம் செய்யத் தக்கதாக எனக்காக அவரை இரந்து மன்றாடும். ஆடுகள் தங்கள் மேய்ப்பனையும், மாடுகள் தங்கள் எஜமானையும் அறிகின்றன. ஐயோ! என்னை உண்டுபண்ணி, இரட்சித்து ஆனந்த பாக்கியம் அளிக்கும் என் தேவனை என்னால் கூடிய வரை அறிந்து அவருக்குள் நான் ஒன்றித்துப் போகாம லிருப்பதால் எனக்கு வெகு சஞ்சலத் துயரமிருக் கிறது. திரியேக தேவனை அறிந்து அவரது சிநேகத் தைக் கொள்ளத்தக்கதாக முத்திப்பேறு பெற்ற வர்கள் சுபாவத்தை ஜெயிக்க எம்மாத்திரமோ அருந்தவம், தியானம், ஜெபம் செய்தார்கள். நான் பாவச் சகதியில் சிக்கி நொந்து பலவீனப்பட்டிருப் பதால், சூரியனைக் போல பரிசுத்தவான்களுக் குப் பிரகாசிக்கும் தேவ வசனங்களை நான் தியா னித்து, என் பலவீனத்திற்குத் தக்க ஜெபங்களைச் செய்து என்னை உருவாக்கின தேவனை அறியக் கிருபை செய்தருள உம்மை மன்றாடுகிறேன். என்னால் பிதாவுக்குத் தோத்திரமும் தேவ சுதனுக்கு ஸ்துதியும், இஸ்பிரீத்துசாந்துவுக்கு நமஸ்காரமும் உண்டாகச் செய்யும். தேவ சுபாவத் தின் மகிமைப் பிரகாசம் என் ஆத்தும அந்தரங் கத்தில் பதியவும், சிருஷ்டிப்புகளின் விவரங்களை அறிந்து நான் சிருஷ்டிகரிடம் சேரவும் செய்தரு ளும். நான் தீர்க்கதரிசனங்களால் தெளிந்து, சுவிசே­ அற்புதங்களால் ஊக்க ஒளி கொண்டு, கிறீஸ்துவின் அரும்பாடுகளாலும், தாழ்மையாலும் மனமகிழ்ச்சி கொண்டு உலகத்தை வெறுத்து அக்கினிமயமான தேவசிநேகத்தைக் கொள்ளக் கிருபை செய்தருளும். பசாசின் தந்திரங்களையும், உலக மாயைகளையும் ஜெயித்து, திரியேக தேவனை சுவைத்துப் பார்க்க வேண்டிய வரத்தை நான் அடைய கிருபை செய்தருளும். சர்வேசுரனை அறிகிற அறிவே நித்திய ஜீவன் என்று அர்ச்சிய சிஷ்டவர்கள் அகமகிழ்ச்சி கொண்டு எல்லாத் தந்திரங்களையும் வென்று நித்திய பேரின்பப் பேறுபெற்றவர்கள் என்று நான் அறிந்திருக் கிறேன். ஆகையால், தேவ சுதனோடு வெகு காலம் பழகிய தேவரீர் தயை புரிந்து தேவனை அறிகிற சாஸ்திரத்தை நான் அடையத்தக்கதாக அவரை எனக்காக வேண்டிக் கொள்ளும். 

ஆமென்.