வாகன ஓட்டுநர்களுக்கான செபம்.

(வாகனத்தை ஓட்டும் முன் செபிக்க வேண்டிய செபம்).

நம்பினோர் அனைவரையும் பாதுகாக்கும் விண்ணக தந்தையே, எம் இறைவா, நீர் உம்மக்களை செங்கடலை பிளந்தும், பாலைவனத்தின் வழியாகயும் பாதுகாப்புடன் செழிப்பான நாட்டிற்கு அழைத்து செல்ல மோயிசனை வழிநடத்துபவராக அனுப்பினீரே,  உம் அன்பு மக்களை மீட்பதற்காக இயேசு கிறிஸ்துவையே இவ்வுலகிலே மனுவாக்கி மீட்டு  இன்றும் தூய ஆவியானவரை வழிநடத்துபவதாகவும் கொடுத்ததற்கு உம்மை போற்றி, நன்றி கூறுகிறேன்.

நான் வாகனத்தை ஓட்டும் போது விவேகத்துடன் ஒட்டவும், ஞானத்துடனும், ஒரே சிந்தனையோடும், ஒரே மன நிலையோடு ஒட்டவும், இயற்கை பாதிப்புகள், ஆபத்துக்கள் வரும் பொழுது பதற்றமில்லாமல் வாகனத்தை ஒட்டவும், என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பயணிகளை (சரக்குகளை) பாதுகாப்புடனும், கொண்டு சேர்க்கவும் பயணத்தின் பாதுகாவலியான சிந்தாத்திரை மாதா வழியாக உம்மை மன்றாடுகிறேன்.

ஆமென் .