திவ்விய நற்கருணைநாதரிடம் அன்பு முயற்சி:


அன்பு நிறை இயேசுவே! உமது அன்புக்கு எல்லைதான் உண்டோ? உமது உடலாலும் இரத்தத்தாலும் எமக்கு ஒரு தெய்வீக விருந்தினை தயார் செய்துள்ளீர். அதில் உம்மை முழுவதும் எமக்கு கொடுக்கின்றீர். இந்த அன்பின் உச்ச நிலைக்கு உம்மை தூண்டியது உமது இதயமன்றோ! அன்பொழுகும் இதயமன்றோ?

ஆராதனைக்குரிய இயேசுவின் திரு இருதயமே, தேவ அன்பின் சூளையே! உமது திருக்காயத்தினுள் என்னை ஏற்றுக்கொள்ளும். அன்பு புகட்டப்படும் அப்பள்ளியில், அளவிறந்த அன்பினை வியத்தகு முறையில் காட்டும் ஆண்டவருக்கு நான் காட்ட வேண்டிய அன்பின் கடமையை உணர்வேனாக.

ஆமென்.