இரக்கத்திற்கான ஜெபம்.

ஆண்டவரே இரக்கமாயிரும். கிறிஸ்துவே இரக்கமாயிரும். பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும். ஏசுவே தாவீதின் மகனே எங்கள் மேல் இரக்கமாயிரும். பாவிகள் எங்கள் மீது இரக்கமாயிரும். இவ்வுலகிலும் எங்கள் நாட்டிலும் குடியிருப்போர் மீது இரக்கமாயிரும். எங்கள் குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். இவ்வுலகில் வாழும் கணவர் மனைவியர், குழந்தைகள், நோயாளிகள் இன்னும் பலவித துன்பங்களில் துன்பப்படுகின்ற மனநோயாளிகள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். இந்த நாளை எங்களுக்கு நல்ல நாளாக அமைய செய்தருளும். இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் இந்நாள் மிகவும் சிறப்பான  நாளாக அமையும் என்று நம்பும்  எங்களையும் ஆசிர்வதியும். எங்கள் அனைவரையும் உம் கண்ணுக்குள் கருவிழியில் வைத்து பாதுகாத்தருளும்.

ஆமென்.