இணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்!

Help us Stay on the Internet and Grow! Thanks!!

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே, கத்தோலிக்க பாரம்பரிய புத்தகங்கள், செபங்கள், இலக்கியங்களை மீட்டெடுத்து உலகெங்கும் கொண்டுசெல்லும் நமது இணையதள முயற்சிக்கும், வானொலி ஒலிபரப்பிற்கும் ஆகும் பெரும் செலவில் நீங்களும் பங்குபெற நன்கொடைகளை வழங்கி ஆன்ம இரட்சண்ய அலுவலில் பங்கேற்க அன்போடு வேண்டுகிறோம். நன்கொடைகளால் மட்டுமே இந்த தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 30,000க்கும் மேற்பட்ட பக்கங்களை உள்ளடக்கிய நமது தளம் இணையத்தில் நிலைக்க உங்கள் ஒவ்வொருவரின் உதவியும் தேவை...

Donation / Contribution

பாத்திமா செபங்கள் 1917

என் தேவனே! உம்மை விசுவசிக்கிறேன், உம்மை ஆராதிக்கிறேன், உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவாசியாதவர்களுக்காகவும், உம்மை ஆராதியாதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை நேசியாதவர்களுக்காகவும் மன்னிப்புக் கேட்கிறேன்.

மகா பரிசுத்த தமத்திரித்துவமே, பிதாவே, சுதனே, இஸ்பிரீத்து சாந்துவே! உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகமெங்குமுள்ள திவ்ய நற்கருணைப் பேழைகளில் இருக்கும் சேசுக்கிறிஸ்து நாதருடைய விலை மதிக்கப்படாத திருச்சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும், அவருக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத் துக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சேசுவின் திரு இருதயத்தினுடையவும், மரியாயின் மாசற்ற இருதயத்தினுடையவும் அளவற்ற பேறுபலன்களைப் பார்த்து, நிர்ப்பாக்கியப் பாவிகளை மனந்திருப்பும்படி மன்றாடுகிறேன்.

ஓ என் சேசுவே, எங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். எல்லா ஆன்மாக்களையும், விசே­மாய், யார் அதிகத் தேவையிலிருக்கிறார்களோ அவர்களையும் மோட்சத்திற்கு அழைத்தருளும்.

பாவிகளுக்காக  உங்களைப்  பலியாக்குங்கள்.   அடிக்கடி,  குறிப்பாக நீங்கள் ஏதாவது ஒரு பரித்தியாகம் செய்யும்போது: “ஓ சேசுவே! உமது அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்பவும், மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு எதிராகச் செய்யப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் இதைச் செய்கிறேன் என்று சொல்லுங்கள்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 9 ம் ஜெபம்

5-வது: தேவ சிநேகம் அடைய ஜெபம்

தேவசிநேகத்தில் மகா ஐஸ்வரியமுடைய வரான அர்ச். சூசையப்பரே! சகல திரவியங்களிலும் மகா அபூர்வமான திரவியமாகிய தேவசிநேகத்தை நான் அடைய எனக்காக சர்வேசுரனை மன்றாடும். என்னைப் படைத்தவரும், காப்பாற்றுகிறவரும், மோட்சம் கொடுக்கிறவரும், சகலவித நன்மை களுக்கும் ஊருணியுமாகிய என் தேவனை நான் சிநேகியாமல் பிறகு யாரை சிநேகிப்பேன்? ஜென்மப் பாவத்தால் அந்த சிநேகம் என்னிடம் அணைந்துபோனதால், மிகவும் மனம் நொந்து கலங்கி விசனப்படுகிறேன். படைக்கப்பட்ட நான் தாய் வயிற்றில் உற்பவமான நாள் முதல் இது வரையில் மதியீனத்தால் கட்டிக்கொண்ட சகல பாவத்தையும் பொறுத்து, என் நன்றிகெட்டதனத் தைச் சட்டை பண்ணாமல், உபகாரத்திற்கு மேல் உபகாரம் செய்து வருகிற ஆண்டவரது சிநேகத்தால் நான் இறந்துபோனாலல்லோ தாவிளை? திவ்ய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவை நேசிக்கா தவன் சபிக்கப்பட்டவன் என்று வேதத்தில் எழுதி யிருப்பதால் என்னை சகல ஆபத்துக்களிலு மிருந்து மீட்டு, தமது கோபாக்கினியின் இடி என் மேல் விழாமல் தடுத்த எனது பிரிய இரட்சகரை நான் நேசிக்காவிட்டால், நானே சபிக்கப்பட்டு அவரை விட்டு நித்திய காலம் பிரிவேன் என்றும் நினைத்து பயந்து நடுநடுங்குகிறேன். கண்களின் இச்சையாலும், மாமிசத்தின் இச்சையாலும், ஜீவியத்தின் பெருமையாலும், காணப்படும் பொருட் களின் மேல் நான் வைத்த ஆசையாலும், உலக வெகுமானத்தின் பேரில் கொண்ட விருப்பத் தாலும், என்னில் தேவசிநேகம் அற்றுப்போன தால், இவை எல்லாவற்றையும் விட்டு என்னையே நான் பகைத்து, என் தேவனை உருக்கமாக சிநேகிக் கும் வரத்தை நான் அடையச் செய்தருளும். உலக சிநேகத்தாலும், அழிந்து போகிற சரீரத்தின் பட்சத் தாலும், உன்னதமான மகிமையும், நித்திய பாக் கியமும், ஏக திரவியமும், அளவற்ற ஞானமும், இன்பக் கடலும், பரிபூரண சத்தியமும், நீதியும், ஞானமுமாயிருக்கிற என் தேவனை நான் இழப் பதை விட, அவரது சிநேகத்தால் என் இரத்த மெல்லாம் சிந்தி அவரது பாதத்தில் என் உயிரை விட்டாலல்லோ தாவிளை? தேவசிநேகம் நிறைந்த மகா பெரிய அர்ச்சியசிஷ்டவரே, சகல நன்மைகளுக்கும் உபகாரங்களுக்கும் ஊருணியான கர்த்தரை நான் என் சகல சத்துவங்களோடும், புத்தி சித்தம் அறிவோடும் எல்லாவற்றையும் பார்க்க, சிநேகிக்கச் செய்தருளும். தேவ கற்பனைகளின்படி நடப்பதே சிநேகமாகையால், உயிருக் கொட்டி அவைகளை அனுசரித்து தெய்வத் தோடு நான் ஐக்கியப்பட எனக்காக அவரை வேண்டிக்கொள்ளும். பாவத்தால் கறைபட்டுக் குளிர்ந்த என் இருதயம், இஸ்பிரீத்துசாந்துவால் அனல் கொண்டு அக்கினி ஆகாயத்தில் தாவுவது போல் என் இருதயம் தேவனை நோக்கித் தாவ எனக்காக வரங் கேட்டருளும். தெய்வத்தைச் சிநேகிக்கிற சிநேகத்தில் நான் தேவனுக்குள் ஐக்கியமாகி, எல்லா மனிதரையும், அவருக் குள்ளும், அவருக்காகவும் சிநேகிக்க அனுக்கிரகித் தருளும். இரக்கமுள்ள தேவசிநேகத்தால் என் விரோதிகளுக்கு நான் பொறுத்தல் கொடுத்துத் தின்மைக்கு நன்மை செய்யும் வரத்தை எனக்குப் பெற்றுத் தந்தருளும். 

ஆமென்.