இதயம் தர வந்தேன் அன்பை நீ தந்தாய் ***

இதயம் தர வந்தேன் அன்பை நீ தந்தாய்
மனிதம் வாழவே மண்ணில் நீ வந்தாய்
என் வாழ்வின் விடியலே வசந்தமே எனைத் தந்தேன்

1. அப்பமும் இரசமும் நான் தந்தேன்
அருளின் உருவாய் நீ வந்தாய்
மண்ணின் கனிகள் நான் தந்தேன்
விண்ணின் கனியாய் நீ வந்தாய்

2. உழைப்பின் பயனை நான் தந்தேன்
வலிமை எனக்கு நீ தந்தாய்
எளியோர் வாழ எனைத் தந்தேன்
என்னில் தியாகம் நீ தந்தாய்