எடுத்து வந்தோம் காணிக்கையை ***

எடுத்து வந்தோம் காணிக்கையை
இறையமுதே உம்மை சூழவந்தோம்
இனிதாகவே எம்மை ஆளவே
இதை ஏற்பாய் என்றே வேண்டுகின்றோம்

1. வாழ்வும் உமதே தாழ்வும் உமதே
வையத்தில் படைத்ததெல்லாம் உமதே
எம் சிறு வயதில் நிகழ்வதெல்லாம்
உம் திருப்பலியாய் மாற்றிடுமே

2. கடைநிலை வாழ்வோர் கடமையை மறந்தோர்
கடவுளை உணர்ந்தே வருகின்றார்
கருணையின் இறைவா கண் பாரும்
திருப்பலி வாழ்வை எமக்கருளும்