இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக ***

இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக
இகத்தில் காணும் படைப்பு யாவும் இறைவா எனக்காக
நினைத்தேன் நினைத்தேன் நான் தர
அனைத்தும் உந்தன் காணிக்கை - என்

1. பூத்துக் குலுங்கும் மலர்களும் - இங்கு
காய்த்துக் கனிந்த கனிகளும்
ஓங்கி உயர்ந்த மரங்களும் - அதைச்
சூழ்ந்து வளர்ந்த செடிகளும்
இயற்கை கூறும் கவிதைகள் - யாவும்
இறைவன் தந்த கொடைகளே

2. பறந்து திரியும் பறவைகள் - அலை
பாயும் கடல்வாழ் விலங்குகள்
காற்றும் கடலும் கார்முகில் - வான
வில்லும் நிலவும் விண்மீன்களும்