தோத்திர பாத்திரனே தேவா தோத்திரந் துதியுமக்கே! ***

தோத்திர பாத்திரனே தேவா
தோத்திரந் துதியுமக்கே!
நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்
நித்தியம் துதியுமக்கே! 

1. சத்துரு பயங்களின்றி - நல்ல
நித்திரை செய்ய எமை
பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே
சுற்றிலுங் கோட்டையானாய்

2. விடிந்திருள் ஏகும்வரை - கண்ணின்
விழிகளை மூடாமல்,
துடி கொள் தாய்போல் படிமிசை எமது
துணை எனக் காத்தவனே

3. காரிருள் அகன்றிடவே - நல்ல
கதிரொளி திகழ்ந்திடவே,
பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன
பாங்கு சீராக்கி வைத்தாய் 

4. இன்றைத் தினமிதிலும் - தொழில்
எந்தெந்த வகைகளிலும்
உன் திறுமறைப்படி ஒழுகிட எமக்கருள்
ஊன்றியே காத்துக் கொள்வாய்