தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ ***

தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா வரம் தருவாயே உருவானவா

1. எனைச் சூழும் துன்பங்கள் கணையாக வரும்போது
துணையாகி எனை ஆள்பவா
மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு
குணமாக்க வருவாயப்பா என்னை உனதாக்கி அருள்வாயப்பா

2. உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா
நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே
நாதா உன் புகழ் பாடுவேன் எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்