தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக ***

தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக
இருப்பதை எல்லாம் கொடுக்கின்றேன்
கொடுத்தவன் நீயன்றோ இறைவா

1. எனக்கென்று கொடுத்ததெல்லாம் எடுத்துக்கொள் முழுவதும்
இளமையும் வளமையும் நான் வழங்கிட வறியவர்க்கே
வரம் தருவாய் இறைமகனே

2. என்னையும் உன்னைப்போல உடைத்திட வருகின்றேன்
உலகோர் வாழ்ந்திடவும் உரிமைகள் அடைந்திடவும்
வரம் தருவாய் இறைமகனே