ஒன்றாகக் கூடி வந்து பாடும் நேரம் ***

ஒன்றாகக் கூடி வந்து பாடும் நேரம் - இது
நன்றியை மாலைகட்டி சூடும் நேரம்
ஆண்டவர் படைத்த நாள் இது இன்று
அன்போடு உறவாடி சேரும் நேரம்
கூடிவருவோம் நன்றி கூறிவருவோம் - இன்று
உள்ளத்தின் உறவுப்பூவைத் தூவி மகிழ்வோம்

1. இறையன்பு இணைக்கின்ற குலமாகினோம்
பிறரன்பில் வாழுகின்ற பிறப்பாகினோம்
அன்பென்னும் புதுவாழ்வின் ஆடையணிவோம்
ஆனந்த பண்பாடிக் கொண்டாடுவோம்

2. குரல் வேறு ஆனாலும் பா ஒன்றுதான்
உடல் வேறு ஆனாலும் மனம் ஒன்றுதான்
இனம் வேறு குலம் வேறு என்பவையெல்லாம்
இயேசுவுக்குள் வந்த நம்மில் இல்லை என்போம்