நன்மைகள் செய்த இறைவனுக்கு ***

நன்மைகள் செய்த இறைவனுக்கு
நன்றியின் பலியை செலுத்திட வாரீர்
நன்மைகள் நாமே அடைவோம் வாரீர்

1. உள்ளத்தைத் தருவது திருப்பலியாம்
உடைந்ததென்றால் அது பெரும்பலியாம்
கொடைகள் பெறுவது தகும் வழியாம்
குறையினைப் போக்கும் கோவழியாம்

2. வானத்தை நோக்கும் நறும்புகை போல்
வாருங்கள் உள்ளத்தை அளித்திடுவோம்
அனைத்தையும் அன்புடன் கொண்டு வந்தோம்
ஆண்டவர் திருமுன் படைத்திடுவோம்