வருக நம் ஆண்டவர் திருமுன்னே ***

வருக நம் ஆண்டவர் திருமுன்னே
வந்தவர் புகழ்பாடுவோம் மகிழ்வுடனே
நம் மீட்பின் கதியவரே - நற்
பண்ணிசைத்தே நன்றி சொல்வோம்

1. ஆண்டவர் நம் பெரும் இறைவனவர் - எத்
தேவர்க்கும் மேல் பெரும் அரசரவர்
உலகனைத்தும் அவர் கரமே
உயர் மலைகளுமே அவர் பொருளே

2. ஆழியும் அவனியும் அவர் படைப்பே - நாம்
தொழு தொழுதவர் அடி பணிந்திடுவோம்
ஆயன் அவர் இறையும் அவர்
அவர் மந்தையின் ஆடுகள் நாம்

3. தந்தைக்கும் தனயர்க்கும் புகழிசைப்போம் - நல்
தூய ஆவிக்கும் நம் புகழே
என்றென்றும் இருந்தது போல்
புகழ் நின்றெங்கும் ஒலித்திடவே