மகிழ்வினை விதைத்திட மனங்களை உயர்த்திட ***

மகிழ்வினை விதைத்திட மனங்களை உயர்த்திட
உறவினராய் வருவோம்
மன்னவன் இயேசுவின் பொன்வழி நடந்திட
அன்பினில் வாழ்ந்திடுவோம் - இறை

1. இதயங்கள் இணைக்கும் அன்புக்கு இணையாய்
பூமியில் ஒன்றுமில்லை
இறைவழி வாழ்ந்திடும் முறையிது தெரிந்தால்
பகைமையின் தொல்லையில்லை
பிரித்திடும் சுயநல வேர்களை அறுப்போம்

2. மனிதரின் உரிமைகள் மறுத்திடும் சமூகம்
இறைவனின் குடும்பமில்லை
எளியவர் வாழ்வுகள் அழிவது தொடர்ந்தால்
இறைவனும் உயிர்ப்பதில்லை
அனைவரும் வாழ்ந்திட நம்மையே அளிப்போம்