வானமும் பூமியும் படைத்தவராம் ***


வானமும் பூமியும் படைத்தவராம்

கடவுள் ஒருவர் இருக்கின்றார்;

தந்தை சுதன் தூய ஆவியுமாய்

நம்மில் உறவுடன் வாழ்கின்றார்!

பரிசுத்த ஆவியின் வல்லமையால்

திருமகன் மரியிடம் மனுவானார்;

மனிதரைப் புனிதராய் ஆக்கிடவே

புனிதராம் கடவுள் மனிதரானார்!

பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்,

கல்லறை ஒன்றில் அடக்கப்பட்டார்;

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்,

மரணத்தின் மீது வெற்றி கொண்டார்!

பரலோகம் வாழும் தந்தையிடம்

அரியணை கொண்டு இருக்கின்றார்;

உலகம் முடியும் காலத்திலே

நடுவராய்த் திரும்பவும் வந்திடுவார்!

பரிசுத்த ஆவியை நம்புகிறோம்,

பாரினில் அவர் துணை வேண்டுகிறாம்;

பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று

பரிகார வாழ்வில் இணைந்திடுவோம்!

திருச்சபை உரைப்பதை நம்புகிறோம்;

புனிதர்கள் உறவை நம்புகிறோம்;

சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை

விசுவாசப் பொருளாய் நம்புகிறோம்!

தூய நல் ஆவியாம் இறைவனையும்

தூயவராக்கும் ஒப்புரவையும்

புனிதராம் இயேசுவின் ஆட்சியையும்

புனித நல் வாழ்விற்காய் ஏற்கின்றோம்.