இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி ***

இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி
திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப்பலி
வாராய் இறை திருக்குலமே வாழ்வாய் பேறுடனே

1. மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே
புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே
விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்
இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம்

2. மகிழ்வுடன் பாடும் வேளையே மனங்களின் சோர்வை நீக்குமே
திருவாழ்வை தேடி பெறுவோம் மறைவாழ்வின் நன்மை அடைவோம்
பணிவாய் குலமாய் இயேசு பதம் இணைவோம்
மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம்