என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் கென்ன குறைவுண்டு நீ சொல் , மனமே ***

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே 

1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் , 
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் ; 
விண்ணுல குயர்ந்தோர் , உன்னதஞ்சிறந்தோர் ,
மித்திரனே சுகபத்திர மருளும்

2. பாபமோ , மரணமோ , நரகமோ ,பேயோ , 
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர் ,
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் ;
சஞ்சலமினியேன் ? நெஞ்சமே , மகிழாய்

3. ஆசி செய்திடுவார் , அருள்மிக அளிப்பார் ,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார் ;
மோசமே மறைப்பார் , முன்னமே நடப்பார் ;
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்

4. கவலைகள் தீர்ப்பார் , கண்ணீர் துடைப்பார் ,
கடைசிமட்டுங் கைவிடா திருப்பார் ;
பவமனிப்பளிப்பார் , பாக்கியங் கொடுப்பார் ,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார்

5. போனது போகட்டும் , புவிவசை பேசட்டும் ,
பொல்லான் அம்புக ளெய்திடட்டும் ,
ஆனது ஆகட்டும் , அருள்மழை பெய்திடும் ,
அன்புமிகும் பேரின்ப மெனக்கருள்