என்றென்றும் உள்ள பேரன்பை நினைத்து ***

என்றென்றும் உள்ள பேரன்பை நினைத்து
ஆண்டவர்க்கு நன்றி என்றும் கூறிடுவோம்
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அல்லேலூயா எனப் போற்றிடுவோம்

1. ஆண்டவர் வல்ல செயல்களை நாளும்
எப்படி சொல்லிப் பாடிடுவோம்
தேர்ந்திட்ட இஸ்ரயேல் மக்களைப் போல
பேற்றினை எமக்குப் பங்காக்கினீர் பெரும்

2. பன்முறை தவறிப் பாதைகள் மறந்தும்
பெயர் பொருட்டு நம்மையே விடுவித்தார்
சிதறிய எம்மை ஒன்றித்து சேர்த்தார்
புகழ்பாக்கள் இசைத்து நன்றி கூறுவோம் என்றும்