பாருள்ளோர் எல்லோருமே பாடுவீர் பரமனை ***

பாருள்ளோர் எல்லோருமே பாடுவீர் பரமனை

1. உவகை நிறைந்த உள்ளத்தினால்
உன்னத இறைவன் தாள் பணிவீர்
திவ்வியமாம் அவர் சந்நிதியில்
தீங்குரல் எழுப்பிப் பாடிடுவீர்

2. ஆண்டவர் அவரே நம் இறைவன்
அவரே நம்மைப் படைத்தாரே
நாம் அவர் மந்தையின் ஆடுகளாம்
நாம் என்றும் அவரின் பிள்ளைகளாம்

3. என்றென்றும் நல்லவர் ஆண்டவரே
என்றென்றும் வாழ்வது அவரன்பே
எந்நாளும் வாழ்ந்திட நல்லிரக்கம்
எப்போதும் கொண்டது அவர் வார்த்தை

4. தந்தைக்கும் மகனுக்கு ஆவிக்குமே
தணியாத புகழும் மகிமையுமே
எந்நாளும் பெருக வாழ்ந்திடுவீர்
இசையோடு பரவிப் போற்றிடுவீர்