நாங்கள் தருகின்ற காணிக்கை ***

நாங்கள் தருகின்ற காணிக்கை
இதை ஏற்றருள் தெய்வமே

1. நிலையற்ற உலகம் நிலையென நினைத்து
நிம்மதியின்றி வாழ்ந்திருந்தோம்
கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில்
காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்

2. வளமற்ற வாழ்வில் வசந்தத்தை தேடி
பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம
அன்பின் பாதத்தில் எங்கள் வாழ்வினை
காணிக்கையாக்கவே இன்று உம்மை நாடினோம்