கொடைகளின் தந்தையே கொடுக்கின்றோம் காணிக்கை ***

கொடைகளின் தந்தையே கொடுக்கின்றோம் காணிக்கை
உடைமையாய் அளித்ததை உமக்கே படைக்கின்றோம்

1. உலகினை இந்த இயற்கையை உருவாக்கினீர் நீரன்றோ
பலவகை உயிரினங்களை படைத்தவர் நீரன்றோ
அனைத்தையும் தந்தவர் நீர்தானே
அன்புடன் அர்ப்பணித்தோம்

2. உழைத்திட வாழ்வில் உயர்ந்திட
எம்மை அழைப்பவர் நீர்தானே புதுயுகம் மண்ணில்
படைத்திட விதை விதைப்பவர் நீர்தானே
புதுமை நாயகன் நீர்தானே புனிதனே பணிகின்றோம்