பலியாக என்னைத் தந்தேன் நீ பரிசாக உன்னைத் தந்தாய் ***

பலியாக என்னைத் தந்தேன் நீ பரிசாக உன்னைத் தந்தாய்
உள்ளதெல்லாம் கொடுத்தேன் நீ
உன்னையே அள்ளித் தந்தாய்
கண்மணி போல காக்கும் உந்தன்
கரத்தில் என்னை முழுதும் தந்தேன்
என்னோடு ஒன்றாகினாய் எல்லாமே உனதாக்கினாய்

1. வாழ்வென்பதோ வெள்ளைத்திரை - அதில்
நிகழ்வென்பதோ நிழலோவியம்
நிலையான உறவாக யாரும் இல்லை
குலையாத நம்பிக்கை எதிலும் இல்லை
நீ இன்றி என் வாழ்வில் நிறைவே இல்லை
நீ என்னில் வந்தாலோ குறைவே இல்லை

2. இருள் நீக்கிடும் ஒளிவெள்ளம் நீ - என்
இதயம் தேடும் அருள்வள்ளல் நீ
உன் வார்த்தை ஒளிதீபம் எரிகின்றதே
என் வாழ்வின் கீழ்வானம் சிவக்கின்றதே
இருள் நேர அய்யங்கள் தடுமாறல்கள்
எனை நீங்கிப் புதுவாழ்வின் ஒளி தோன்றுதே