தந்தாய் நாங்கள் வந்தோம் உம் பாதம் காணிக்கை தந்தோம் ***

தந்தாய் நாங்கள் வந்தோம் உம் பாதம் காணிக்கை தந்தோம்
ஏற்றீடுவீர் மாற்றிடுவீர் வாழ்வுகள் மலர அருள்புரிவீர்

1. கல்வாரி மலைமீது சிலுவை
எம் பாவ பரிகார முழுமை
எவ்வாறு சுமப்போம் பளுவை
என்பவன் சுயநலத்தின் அடிமை
ஓ இயேசுவே எம் அன்பினை
காணிக்கையாகத் தந்தோம்
ஓ இயேசுவே எம் வாழ்வினை
அர்ப்பணம் செய்திட வந்தோம்

2. ஏழ்மையில் வாழ்ந்திடும் சிலுவை
ஏளனப் பொருளாகும் நிலைமை
எவ்வாறு மாற்றுவது இதனை
என்பதே வாழ்க்கையின் கடமை
ஓ இயேசுவே பணி வாழ்வினை
காணிக்கையாகத் தந்தோம்
ஓ தேவனே உன் தோள்களின்
சிலுவை சுமந்திட வந்தோம்