யெஹோவாரா என் நல்லாயன் ***

யெஹோவாரா என் நல்லாயன்
எனக்கென்ன குறைவு உண்டு
எதுவும் வேண்டாம் எதுவும் வேண்டாம்
நீர் மட்டும் போதுமய்யா

1. பசும்புல் மேய்ச்சலிலே என்னை இளைப்பாறச் செய்கின்றீர்
பரந்த நீரோடையில் அய்யா என் தாகம் தணிக்கின்றீர்

2. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்
உம் கோலும் கைத்தடியும் என் துணையாய் வந்திடுமே

3. எதிரிகள் கண்முன்னே நீர் விருந்தொன்றைத் தருகின்றீர்
தலைக்கு எண்ணெய் பூசி அய்யா என் கிண்ணம் நிரப்புகின்றீர்