இதயங்கள் மலரட்டுமே இங்கு இன்னிசை முழங்கட்டுமே நம்மில் ***

இதயங்கள் மலரட்டுமே
இங்கு இன்னிசை முழங்கட்டுமே நம்மில்
இறையருள் வளரட்டுமே
அது இகமெல்லாம் பரவட்டுமே

1. அண்ணலே இங்கு நமை அழைத்தார் - இம்
மண்ணிலே பொங்கும் வாழ்வளித்தார்
வரையில்லா வரங்களை நமக்களித்தார் - தம்
கரையில்லா கருணையால் நமை மீட்டார்

2. அன்பிலே மலர்கின்ற விசுவாசம் - அது
குன்றின்மேல் ஒளிர்கின்ற திருவிளக்காம்
நீதியும் உண்மையும் அதன் சுடராம் - அவை
தீதில்லா வாழ்வுக்கு வழிகாட்டும்