குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,
கொள்ளாய் கண் கொண்டு
1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ! தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,
சேனைத்திரள் சூழ
2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை
3. சந்திர சூரிய சசல வான் சேனைகள்
சகியாமல், நாணுதையோ! தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ?
4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே அவர்
தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூறோடுது பார்
5. எருசலேம் மாதே, மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ? நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ?