இறைவனின் ஆவி நிழலிடவே ***

இறைவனின் ஆவி நிழலிடவே
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே
என்னை அழைத்தார் அன்பில் பணித்தார்
அவர் பணிதனைத் தொடர்ந்திடவே

1. வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும்
அடிமைகள் விடுதலை அடைந்திடவும்
ஆண்டவர் அரசில் துயரில்லை - என
வான் அதிரப் பறைசாற்றிடவும்

2. குருடரும் ஒளியுடன் நடந்திடவும்
குவலயம் நீதியில் நிலைத்திடவும்
அருள்நிறை காலம் அவனியிலே - இங்கு
வருவதை வாழ்வினில் காட்டிடவும்