மண்ணிற்கு விண்ணதன் காணிக்கை ***

மண்ணிற்கு விண்ணதன் காணிக்கை
மேகங்கள் சிந்திடும் நீர்த்துளியோ
கண்ணிற்கு எதுவோ காணிக்கை
கடவுள் படைப்பின் மாட்சிமை

1. ஏவையின் மைந்தனாம் ஆபேலும்
ஆடுகள் பலியை ஈந்தனன்
பூவைமரி மைந்தன் இயேசுவும்
செம்மறி பலியும் ஆகினார்

2. தாவீதின் மைந்தன் சாலமோன்
ஆலயம் கட்டியே பலியிட்டான்
ஆவலில் அவன்போல் நாமிங்கு
ஆலயம் எழுப்பிப் பலியிட்டோம்