தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து
தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய்
1. வழங்கிடக் கனியோ உணவோ இன்றி
வாடிடும் வறியோர் பலர் இறைவா
வெறும் விழிநீர் வியர்வை வேதனை அன்றி
வேறெதும் இல்லா நிலை இறைவா
2. உனக்கென எம்மை வழங்கிடும் வேளை
உன்னருள் இவர்க்காய் கேட்கின்றோம்
எங்கள் மனம் பொருள் ஆற்றல் அனைத்தையும்
இவர் தம் மனத்துயர் நீங்கப் படைக்கின்றோம்