திருமுன் வந்தோம் திருப்பலி பொருளுடன் ***

திருமுன் வந்தோம் திருப்பலி பொருளுடன்
அருளுடன் ஏற்பாய் திருவே

1. தளிர்பாதம் வைத்தே படைத்தோம் பொருளை
ஒளிர்க்கரம் கொண்டு ஆசீர்வதிப்பாய்
களிப்புடன் எம்மையும் ஒன்றாக இணைந்து ஆ
அளித்தோம் பலியாய் இறைவா ஏற்பாய்

2. அளிக்கும் பொருளோ அருகதை உண்டோ
அளிப்பவர் தாமோ தகுதியும் உண்டோ
இருப்பினும் பொருளை எம்மோடு கொணர்ந்து
விரும்பி இறைவா ஏற்றிடு என்றோம்