தந்தானைத் துதிப்போமே திருச்சபையாரே ***

தந்தானைத் துதிப்போமே திருச்சபையாரே, கவி பாடிப்பாடி. 
விந்தையாய் நமக்கனந்தனந்தமான, 
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத்

1. ஒய்யாரத்துச் சீயோனே - நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து, 
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும்

2. கண்ணாரக் களித்தாயே - நன்மைக் 
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து 
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே

3. சுத்தாங்கத்து நற்சபையே - உனை 
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து 
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின் 
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம்

4. தூரம் திரிந்த சீயோனே - உனைத் 
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி, 
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை 
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை

5. சிங்காரக் கன்னிமாரே, - உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து,
மங்காத உம் மணவாளன் யேசுதனை 
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும்