உன்னத தேவனவர் நம்மை படைத்தவர் ஆள்பவர் ஆண்டவர் அவரே ***

உன்னத தேவனவர் - நம்மை
படைத்தவர் ஆள்பவர் ஆண்டவர் அவரே

1. காலையும் மாலையும் கடவுளின் மேன்மை
பாடுதல் நல்லதுவே
கனிவுடன் பாடலில் வீணையும் யாழும் மீட்டிட
பாடுதல் நல்லதுவே

2. ஆண்டவர் மாபெரும் செயல்கள் அனைத்தும்
அறிவிலி அறிவதில்லை
பாவிகள் செழிப்புடன் வாழ்ந்திருந்தாலும்
பாவங்கள் அவர்களை விடுவதில்லை

3. மகிழ்வுறும் செய்தியை என் மனம் குளிர
இறைவன் எனக்களித்தார்
மாமரம் கேதுரு போலவே வளர்ந்து
நீதியில் வாழ்ந்திடச் செய்கின்றார்