உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை ***

உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா
அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண்
தணலிலும் மனம் குளிரும் - உந்தன்
கண்களின் இமைபோல் எந்நாளும் என்னைக்
காத்திடு என் இறைவா

1. பாவங்கள் சுமையாய் இருந்தும் - உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும்
கருணையின் மழையில் நனைந்தால் - உன்
ஆலயம் புனிதம் அருளும்

2. வலையினில் விழுகின்ற பறவை - அன்று
இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள்மழை பொழிந்தே - நீ
வளர்த்திடு அன்பதன் உறவை