உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே இறையருள் மலர ***

உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே இறையருள் மலர
மனங்கள் ப+க்கள் சிந்த வசந்தம் வாழ்வில் பொங்க
வாரும் இறைகுலமே

1. இரவினில் தவித்திட்ட வேளையிலே - முழு
நிலவாய் நிலமதில் நடந்தவனே
இடர்தனில் துடித்திட்ட பொழுதினிலே - எங்கள்
இதயத்தில் மலர்ந்திடும் சுடரொளியே
பாவம் நம்மிலே மறையாதோ - தேவன்
பாதம் நம்மிலே பதியாதோ
சோகங்கள் மறைந்திட அருள்புரிவாய்

2. கவலைகளால் மனம் கலங்கையிலே - உந்தன்
கரங்களால் என்னைத் தாங்க வந்தாய்
ஆறுதல் தேடி நான் அலைகையிலே - உந்தன்
விழிகளில் கருணை மழை பொழிந்தாய்
புதிய உறவுகள் மலர்ந்திடவே - உந்தன்
அன்பின் பலியினில் கலந்திடவே
ஓர் குலமாய் ஒன்று கூடி வந்தோம்