மகிழ்ச்சியினால் பாடுவாய் ***

மகிழ்ச்சியினால் பாடுவாய்
ஏனெனில் ஆண்டவர் உன் நடுவிலே
மேன்மையோடு விளங்குகின்றார்

1. ஆண்டவர் தாமே என் மீட்பரானார்
அவர் மேல் நம்பிக்கை வைக்கின்றேன்
ஆண்டவரே என் வலிமையானார்
அவரையே நான் இன்று பாடிடுவேன்
ஏனெனில் ஆண்டவர் எனக்கு இன்றும்
மீட்பராய் விளங்குகின்றார்

2. ஆண்டவரை என்றும் போற்றிடுங்கள்
அவர் பெயரை என்றும் புகழ்ந்திடுங்கள்
ஆண்டவர் அவர் என சாற்றிடுங்கள்
அவருக்கு நன்றி கூறிடுங்கள்
ஏனெனில் வியத்தகு செயல்களையும்
செய்துன்னை மீட்டவராம்