நிறையருள் வாழ்வுப் பயணத்திலே பேரணியாய் நாம் செல்வோம் ***

நிறையருள் வாழ்வுப் பயணத்திலே பேரணியாய் நாம் செல்வோம்
இறைவனின் தியாக பலியினிலே
கலந்திடவே நாம் இணைவோம்

1. அவனியிலே இறைவனுக்காய்
அர்ப்பணம் செய்தவர் பேறுபெற்றோர் - எனும்
அருட்சான்று பகர்ந்திடவே
அன்பர்களே ஒன்று கூடிடுவோம்
அன்பு உள்ளங்கள் நாம் இணைவோம்
இன்ப வெள்ளத்தில் நனைந்திடுவோம்

2. அன்பரசை அகிலமெங்கும்
பரவிடச் செய்தவர் பேறுபெற்றோர் - அந்த
அருள்வாழ்வு பரவிடவே
தீபங்களாய் நின்று எரிந்திடுவோம்
உண்மை தெய்வத்தை நாம் தொழுவோம்
விண்ணின் செல்வத்தில் திளைத்திடுவோம்