கண்ணில் புதிய வானம் கையில் புதிய பூமி ***

கண்ணில் புதிய வானம் கையில் புதிய பூமி
செல்வோம் புதிய பாதை இயேசு அழைக்கின்றார்

1. நீதி மறையும் போது அமைதி இல்லையே
நீங்காப் பகையினாலே வாழ்வில் தொல்லையே
இணைவோம் பகை மறப்போம் இறைவன் உறவிலே

2. கவலை இனியும் இல்லை காப்பார் இறைவனே
அவரின் அன்பின் அரசில் அனைத்தும் இனிமையே
இணைவோம் அன்பைப் பகிர்வோம் இறைவன் உறவிலே